Skip to content

செடிமுருங்கை சாகுபடி செய்யும் முறை !

25 சென்ட் நிலத்தில் தலா ஆறரையடி இடைவெளியில், ஓர் அடி ஆழ, அகலமுள்ள 240 குழிகள் அமைக்க வேண்டும். ஒரு குழிக்கு 250 கிராம் மண்புழு உரம், 500 கிராம் ஆட்டு எரு, 100 கிராம் வேப்பம் பிண்ணாக்கு, தலா 20 கிராம் சூடோமோனஸ், அசோஸ்பைரில்லம், பாஸ்போ-பாக்டீரியா, டிரைக்கோ… 

மணத்தக்காளி சாகுபடி

மணத்தக்காளி விதைக்காக அலையத் தேவையில்லை. சில செடிகளை அறுக்காமல் விட்டால், காய் பிடித்து, பழம் வைக்கும். அந்தப் பழங்களைப் பறித்து, விதைகளை எடுத்து, சாம்பலில் புரட்டி காய வைத்து, பயன்படுத்தலாம். மணத்தக்காளி, களர்நிலம் தவிர மற்ற அனைத்து வகை மண்ணிலும் வளரும். செம்மண் மற்றும் மணல் கலந்த செம்மண்… 

மணத்தக்காளிக் கீரையின் மருத்துவ பயன்கள்

கையளவு மணத்தக்காளிக் கீரையுடன் 4 சிட்டிகை மஞ்சளையும் சேர்த்து கொதிக்கவைத்துச் சாப்பிட்டால், வாய்ப்புண், நாக்குப் புண் போன்றவை குணமாகும். மணத்தக்காளிக் கீரையுடன் சிறிதளவு உப்பு சேர்த்து சமைத்துச் சாப்பிட்டு வந்தால் நாள்பட்ட வாத நோய்கள் தீரும். ஒரு கைப்பிடி மணத்தக்காளிக் கீரையுடன் ஒரு மாசிக்காயை சேர்த்து கஷாயமாகச் செய்து… 

பருவ காலங்களுக்கு ஏற்ற கீரைகள்

தமிழகத்தில் நிலவும் தட்பவெப்ப நிலையை, சித்தர்களும், முன்னோர்களும் 6 வகைப் பருவங்களாகப் பிரித்துள்ளனர். கீரைகள் பற்றிய இந்தப் புத்தகத்தில் பருவ காலங்களுக்கு என்ன தொடர்பு என்ற கேள்வி எழலாம். இருக்கிறது, மற்ற உணவுகளைப் போல் கீரை உணவுகள் கிடையாது. மற்றவற்றில் இல்லாத, கிடைக்காத பல ‘நல்ல விஷயங்கள்’ கீரைகளில்… 

கீரைகளைப் பயன்படுத்துவதற்கு முன் கவனிக்க வேண்டியவை

கடைக்குப் போகிறோம், கீரைக்கட்டு வாங்கி வருகிறோம் அல்லது தோட்டத்தில் இருக்கும் கீரையைக் கிள்ளி வருகிறோம் அல்லது மரத்தில் இருந்து ஒடித்துக்கொள்கிறோம். வீட்டுக்குக் கொண்டு வந்த உடனேயே அதை அப்படியே சமைத்துச் சாப்பிட்டு விட முடியாது. கீரை என்பது மிகவும் எளிமையான உணவுதான் என்றாலும், அதைச் சமைத்துச் சாப்பிடுவதற்கு முன்… 

அகத்திக் கீரை (Sesbania grandiflora)

சித்தர் பாடல் மருந்திடுதல் போகுங்காண் வன்கிரந்தி வாய்வாம் திருந்த அசனம் செரிக்கும் – வருந்தச் சகத்திலெலு பித்தமது சாந்தியாம் நாளும் அகத்தியிலை தின்னு மவர்க்கு                             (அகத்தியர் குணபாடம்) பொருள் உடலின் அதிகப்படியான பித்தத்தைக் குறைக்கும். ஜீரண சக்தியை அதிகரிக்கும். உணவில் கலந்து கொடுக்கப்படும் விஷப்பொருள்களை முறிக்கும். நிறைய… 

புதினா (Mentha Arvensis)

சித்தர் பாடல் அருசி யொடுவாந்தி யக்கினி மந்தங் குருதி யழுக்குமலக் கொட்ட – விரியுந் துதியதன்று சோறிறங்குத் தொல்லுலகில் நாளும் புதியனல் மூலி புகல். (அகத்தியர் குணபாடம்) பொருள் ருசியின்மை, வாந்தி மற்றும் உஷ்ண நோய்களை நீக்கும். ரத்தத்தைத் தூய்மைப்படுத்தும். வாயுப் பிரச்னையைத் தீர்ப்பதுடன், மலச்சிக்கலையும் போக்கும். புதினா… 

கறிவேப்பிலை (Murraya Koenigii)

சித்தர் பாடல் வாயினருசி வயிற்றுளைச்ச னீடுசுரம் பாயுகின்ற பித்தமென் பண்ணுங்கான் – தூய மருவேறு காந்தளங்கை மாதே! உலகிற் கறிவேப் பிலையருந்திக் காண். (அகத்தியர் குணபாடம்) பொருள்: ருசியின்மை, வயிற்றுப் பிரச்னை, காய்ச்சல், பித்த நோய்கள் போன்றவை தீரும். கறிவேப்பிலையின் தன்மை உரமாக்கி = Tonic பசித்தூண்டி =… 

கொத்தமல்லி (Coriandrum Sativum)

சித்தர் பாடல் கொத்தமல்லி வெப்பம் குளிர்காய்ச்சல் பித்தமந்தஞ் சர்த்திவிக்கல் தாகமொரு தாதுநட்டம் – கத்தியெழும் வாத விகார்மடர் வன்கர்த்த பிவிரணம் பூதலத்தில் லாதகற்றும் போற்று. கொத்தமல்லிக் கீரையுண்ணில் கோரவ நோசகம்போம் பித்தமெல்லாம் வேருடனே பேருங்கான் – சத்துவமாம் கச்சுமுலை மாதே! நீ காண். (அகத்தியர் குணபாடம்) பொருள் உடல்… 

புளிச்சக் கீரை (Hibiscus Cannabinus)

சித்தர் பாடல் தேகசித்தி யாகுஞ் சிறுகாசம் மந்தமறும் போகமுறும் விந்துவுநற் புஷ்டியுண்டாம் – வாகாம் வெளிச்சிறுமான் நோக்குவிழி மென்கொடியே! நாளும் புளிச்சிறு சீரையுண்ணும் போது. (அகத்தியர் குணபாடல்) பொருள் ஆரம்ப நிலை காச நோய் குணமாகும். உடலின் மந்தத்தன்மை விலகும். வறட்சி அகற்றி –  Emollient மலம் போக்கி… 

error: Content is protected !!