Skip to content

கொத்தமல்லி செடி சாகுபடி

ஆண்டிபட்டி பகுதியில் குறுகிய காலத்தில் அதிக பலன் தரும் கொத்தமல்லி செடி சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். கீரையாகப்பயன்படும் கொத்தமல்லி செடியின் இலைகள் சமையலில் சுவை மற்றும் மணத்திற்காக உபயோகப்படுத்தப்படுகிறது. மூலிகைத்தன்மை கொண்ட இவை குறிப்பிட்ட சில மாதங்களில் மட்டுமே செழித்து வளரும் தன்மை கொண்டதால் ஆண்டு… 

கொத்தமல்லி

கொத்தமல்லி (Coriandrum sativum) அல்லது மல்லி எனப்படுவது ஒரு மூலிகையும், கறிக்குப் பயன்படும் ஒரு சுவைப்பொருளும் ஆகும். இது Apiaceae தாவரக் குடும்பத்தைச் சார்ந்தது. சிறு செடி வகையைச் சார்ந்தது. இச்செடி 50 செமீ உயரம் வளரக் கூடியது. இந்தியா முழுவதும் பயிரிடப்படுகிறது. சைவமாகட்டும் அசைவமாகட்டும் சமையல் மணத்தை,… 

பலன் தரும் வல்லாரை..!

திப்பிலியை வல்லாரைச் சாற்றில் 7 முறை ஊறவைத்துப் பாவனை (பக்குவம்) செய்து உலர்த்திப் பொடித்து உண்டுவர, மூளை சுறுசுறுப்பாக இயங்கும். தொண்டை கரகரப்பு நீங்கி குரல்வளம் உண்டாகும். உலர்ந்த வல்லாரை இலை, வெட்பாலை விதை, வசம்பு, சுக்கு, திப்பிலி ஆகியவற்றைச் சமஎடையில் எடுத்துப் பொடி செய்து வைத்துகொள்ளவும். இதிலிருந்து… 

புதினா சாகுபடி செய்யும் முறை..!

வடிகால் வசதியுடைய செம்மண், மணல் கலந்த செம்மண் நிலங்களில் நன்றாக வளரும். தண்ணீர் தேங்கி நிற்கும் நிலம் மற்றும் களிமண் நிலங்களில் இதை சாகுபடி செய்வதைத் தவிர்க்கலாம். இதற்குத் தனியாக பட்டம் இல்லை. அனைத்துப் பட்டங்களிலும் நடவு செய்யலாம். ஒரு முறை நடவு செய்தால், அதிகபட்சம் இரண்டு ஆண்டுகள்… 

சுழற்சி முறையில் கீரை சாகுபடி..!

”பொதுவாக கீரை சாகுபடிக்குப் பட்டம் கிடையாது. எப்போது வேண்டுமானாலும் விதைக்கலாம். அதிக மழைப் பொழியும் சமயத்தில் விதைப்பைத் தவிர்க்க வேண்டும். விதைக்கப்போகும் நிலத்தின் அளவை முடிவு செய்து, தேர்ந்தெடுக்கப்பட்ட நிலத்தை நன்கு உழுது, 6 அடி நீளம் 4 அடி அகலத்தில் பாத்திகள் எடுக்க வேண்டும். ஒரு பாத்திக்கு… 

22 நாட்களில் கீரைச் சாகுபடி செய்யும் முறை!

கீரை குறுகிய காலப் பயிர். 22 நாட்களில் அறுவடைக்கு வந்துவிடும். நிலத்தை நன்கு உழுது ஒரு ஏக்கருக்கு 7 டன் என்ற கணக்கில் தொழு உரத்தைக் கொட்டி ஓர் உழவு செய்ய வேண்டும். பிறகு, 5 அடி அகலம், 12 அடி நீளம் இருக்குமாறு பாத்திகள் அமைக்க வேண்டும்… 

இயற்கை முறையில் கீரை சாகுபடி!

இயற்கை முறையில் கீரை சாகுபடி செய்வது குறித்து, இயற்கை விவசாயி ‘முசிறி’ யோகநாதன் சொல்லும் விஷயங்கள் இங்கே.. அரைக்கீரைக்கு அனைத்து மண் வகைகளும் ஏற்றவை. இதற்குப் பருவம் தேவையில்லை. கீரைக்கு எந்த ரசாயனமும் தேவையில்லை. பூச்சி, நோய் தாக்குதல் இருந்தால்.. மூலிகைப் பூச்சிவிரட்டி தெளித்துக் கட்டுப்படுத்தலாம். ஓர் அறுவடை… 

தூதுவளையின் நன்மைகள் (Solanum trilobatum)

சித்தர் பாடல் காதுமந்தம் காதெழுச்சி காசந் தினவுமதம் ஓது மந்தம் முத்தோடம் உட்சூலை – தாதுநட்டம் மீதுளைப் பத்திரியை மேவச்செய் வாராய்ந்தோர் தூதுவளைப் பத்திரியைத் தூய்த்து.                                (பதார்த்த… 

வல்லாரைக் கீரை (Centella asiatica)

சித்தர் பாடல் அக்கர நோய் மாறும் அகலும் வயிற்றிழிவு தக்கவிரத் தக்கடுப்புத் தானேகும் – பக்கத்தில் எல்லாரையு மருத்தென் றேயுரைத்து நன்மணையுள் வல்லாரையை வளர்த்து வை.                                … 

கரிசலாங்கண்ணி கீரை (Eclipta prostrate)

சித்தர் பாடல் குரற்கம்மற் காமாலை குட்டமொடு சோபை யுற்றபாண்டு பன்னோ யொழிய – நிரற் சொன்ன மெய்யாந் தகரையொத்த மீளிண்ணு நற்புலத்துக் கையாந் தகரையொத்தக் கால்.                                … 

error: Content is protected !!