Skip to content

பூச்சி மேலாண்மை – தமிழக மிளகாய் விவசாயிகளுக்கு ஒரு எச்சரிக்கை

– புதிய வகை பூச்சி தாக்குதல்

கடந்த சில மா தங்களாக
இந்தோனேசியாவில் இருந்து ஒரு புதிய
ஆக்கிரமிப்பு வகை இலைப்பேன் (Thrips
– த்ரிப்ஸ்) இந்திய மாநிலம் முழுவதும்
ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா மற்றும்
பிற மாநிலங்களில் மிளகாய் விவசாயிகளுக்கு
பெரும் இழப்பை ஏற்படுத்தி வேகமாக பரவி,
மிளகாய் பயிரை ‘த்ரிப்ஸ் பர்விஸ்பினஸ்’
(Thrips parvispinus) அழித்து வருகிறது.
தெலுங்கானாவில் 10 மாவட்டங்களில்
கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 1.19
லட்சம் ஏக்கர் அதிகமாக 3.59 லட்சம் ஏக்கரில்
மிளகாய் பயிரிடப்படுகிறது. தற்போது நாடு
முழுவதும் மிளகாய் பயிருக்கு ஏற்பட்டுள்ள சேதம் 6,01,500 டன்கள் மற்றும் 2020-
21 ஆம் ஆண்டில் 8,430 கோடி ரூபாய்
மதிப்பிலான ஏற்றுமதியை பாதிக்கும் என
எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக, மிளகாய்ப் பயிரை
பாதிக்கும் பொதுவான பூச்சிகளான Scirtothrips
dorsalis மற்றும் Thrips hawaiiensis ஆகியவை
இருந்தன, ஆனால் இந்தோனேசியாவில்
தோன்றி 2015 இல் இந்தியாவில் முதன்முதலில்
காணப்பட்ட ‘Thrips parvispinous’ என்ற புதிய
வகை பூச்சி பல மாநிலங்களில் மீண்டும்
2021ல் எழுச்சி பெற்றது. இந்த வகை பூச்சிகள்
பூச்சிக்கொல்லிகளுக்கு எதிரான எதிர்ப்பை
உருவாக்குகின்றன.

#விவசாயம்
மேலும் தகவல்களுக்கு…
https://www.vivasayam.org/wp-content/uploads/2022/01/56-ISSUE-AGRISAKTHI_mobile_28-1-2022.pdf விவசாயம்
பற்றிய அனைத்து தகவல்களையும் அறிந்துகொள்ள….

Vivasayam in Tamil

விவசாயம் செயலியை இன்றே தங்களின் கைப்பேசியில் பதிவிறக்கம் செய்துகொள்ள

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.vivasayamintamil

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Murali Selvaraj

Murali Selvaraj