கிருஷ்ணகிரி: பாளேகுளி ஏரியில் இருந்து, சந்தூர் ஏரிக்கு, கால்வாயில் தண்ணீர் திறக்கப்பட்டதால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணை இடதுபுறக்கால்வாயின் கடைமடை ஏரியான, பாளேகுளி ஏரியில் இருந்து, கால்வாய் மூலம் தண்ணீர், சென்றாம்பட்டி ஏரி, அரசமரத்து ஏரி, செல்லம்பட்டி ஏரி, நாகரசம்பட்டி ஏரி வழியாக சந்தூர் ஏரி உள்ளிட்ட, 27 ஏரிகளுக்கு செல்லும் வகையில் கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஏரியில் இருந்து, தண்ணீர் திறக்க வேண்டும் என வலியுறுத்தி, கே.ஆர்.பி., அணை இடதுபுற நீட்டிப்பு பாளேகுளி-சந்தூர் பயனாளிகள் சங்க விவசாயிகள் கோரிக்கை விடுத்திருந்தனர். இதையடுத்து, நேற்று, பாளேகுளி ஏரியில் இருந்து, சந்தூர் ஏரிக்கு, கிருஷ்ணகிரி அணை உதவி செயற்பொறியாளர் நடராஜன் தண்ணீரைத் திறந்து வைத்தார். இதனால், அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். அனைத்து ஏரிகளும் நிரம்ப வேண்டும் என்பதற்காக, சுழற்சி முறையில் தண்ணீர் விடப்படுகிறது, என, பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்

Related Posts

“சங்க இலக்கியம் கூறும் வாழ்வியல் வரலாறு’’
இறப்புக்குப் பின்பும் ஒரு வாழ்வு இருப்பதாக மனிதர்கள் நம்பினார்கள். குறிப்பாக அரசர்கள்.. பிரபுக்கள்.. மற்றும் பலரும்.. அந்த இறப்பிற்கு பின்பான வாழ்விலும் சுகபோக வாழ்க்கையை வாழ ஆசைப்பட்டனர்.. அங்கு…. ஓர் அரசன். தான் இறந்தபிறகும்… Read More »“சங்க இலக்கியம் கூறும் வாழ்வியல் வரலாறு’’

பெருமதிப்புக்குரிய முதல்வர் அவர்களுக்கு அக்ரிசக்தியின் வேண்டுகோள்
தமிழ்நாடு முழுதும் தற்போது பெய்து வெப்பச்சலனமழையால் ஆங்காங்கே நெல் விற்கும் மையங்களில் குவிந்துள்ள நெல் மூடைகள் மழையில் நனைந்து வீணாகும் செய்திகளை தாங்கள் அறிவீர்கள். தமிழகம் முழுதும் பல்வேறு இடங்களில் இந்த நிலை நிலவிவருகிறது,… Read More »பெருமதிப்புக்குரிய முதல்வர் அவர்களுக்கு அக்ரிசக்தியின் வேண்டுகோள்

அக்ரிசக்தி விவசாயம் 2021 ஆய்வுப்போட்டி
அக்ரிசக்தி சார்பாக விவசாயம் மற்றும் கால்நடை மருத்துவம் பயிலும் மாணவர்களுக்கான போட்டி! நிபந்தனைகள் விவசாயிகளை நேரடியாக பேட்டி எடுக்க வேண்டும். அதில் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனை என்ன, அதற்கான தீர்வுகள் என்ன என்பதை கட்டுரை… Read More »அக்ரிசக்தி விவசாயம் 2021 ஆய்வுப்போட்டி
happiest news…. at the same time we also want water for our lake in vikkinampatti which is placed next to santhoor…