Skip to content

நெகிழிக்கு தடை: விவசாயிகளுக்கு வளமான வாய்ப்புகள்

வரும் 2019 ஜனவரி 1ம் தேதி முதல் தமிழகத்தில் பிளாஸ்டிக் பொருள் பயன்பாட்டிற்கும், உற்பத்திக்கும், தடை விதிக்கப்படுவதாக சட்டசபையில் முதல்வர் பழனிசாமி அறிவித்தார்

சட்டசபையில், 110வது விதியின் கீழ் முதல்வர் வெளியிட்ட அறிக்கை:
மனித உயிருக்கும், சுகாதாரத்திற்கும் தீங்கு விளைவிக்கும் வகையில் பிளாஸ்டிக் உள்ளது. பிளாஸ்டிக் தட்டு, பிளாஸ்டிக் தேநீர் கப்புகள், பாட்டீல்கள், கைப்பைகள் உள்ளிட்டவை தடை செய்யப்படுகின்றன. பால், தயிர், எண்ணெய், மருந்துப் பொருட்களுக்கு மட்டும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தலாம். பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்யவோ, விற்பனை செய்யவோ கூடாது. சேமித்து வைக்கவும் கூடாது. சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு இந்த அறிவிப்பு வெளியிடப்படுகிறது.

இந்த அறிவிப்பு காலம் கடந்தது என்றாலும் விவசாயிகளுக்கு ஆனா வாய்ப்புகள் மிக பிரகாசமாக உள்ளது. ஏனெனில் நெகிழிக்கு மாற்று இப்போது இருக்கும் பலவற்றினை நாம் உணர்ந்தாலும் விலை குறைவான அதே சமயம் சுற்றுப்புற சூழலுக்கு ஏற்ற ஒன்றினை நாம் கண்டறியவேண்டும். அதை அதிக அளவில் உற்பத்தி செய்யவேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Murali Selvaraj

Murali Selvaraj