Skip to content

மண்பானை பாசனம்..!

தனது பண்ணையில் ஏராளமான மரங்களை நட்டு வைத்துள்ள கண்ணன், அவற்றுக்கு மண் பானை பாசனம் அமைத்துள்ளார். இதைப்பற்றிப் பேசிய கண்ணன், “வேலி ஓரமா இருக்கிற மரங்களுக்கு அடிக்கடி பாசனம் செய்ய முடியாது. அதனால் ஒவ்வொரு செடி பக்கத்திலேயும் அஞ்சு லிட்டர் கொள்ளளவுள்ள மண்பானையைப் புதைத்து வைத்திருக்கிறோம்.. பானையை புதைப்பதற்கு முன்னால், பானைக்கு அடிப்பக்கம் பக்கவாட்டில் சின்னதாக ஒரு துளை போட்டுவிடுவோம். அதோட வாய்ப்பகுதி மட்டும் கொஞ்சம் சாய்வா இருக்கிற மாதிரி புதைத்துவிடுவோம்.

வாய்க்காலில் தண்ணீர் பாய்ச்சும்போது, பானைக்குள்ளேயும் தண்ணீர் நிறைந்துவிடும். நிலத்தில் ஈரம் காயக்காயப் பானையில இருக்கிறத் தண்ணீர் சொட்டுச் சொட்டா இறங்கிட்டே இருக்கும். இதனால, செடியோட வேர்ப்பகுதி எப்பவும் ஈரப்பதத்தோட இருக்கும். பானைத் தண்ணி முழுமையா இறங்க 15 நாட்கள் ஆகும். அதற்குள் அடுத்த பாசனம் கொடுத்துவிடுவோம். இதனால் வருஷம் முழுக்கச் செடிகளுக்குப் போதுமான தண்ணீர் கிடைத்து, செடிகளோட வளர்ச்சி நன்றாக இருக்கிறது” என்றார்.

நன்றி

பசுமை விகடன்

மேலும் செய்திகளுக்கு

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.Thiral

3 thoughts on “மண்பானை பாசனம்..!”

  1. பிளாஸ்டிக் பாட்டில்களை புதைத்து வைக்கலாமா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Murali Selvaraj

Murali Selvaraj