Skip to content

புதிய மரபணுவால் மரங்களுக்கு பாதுகாப்பு

உணவு மற்றும் விவசாய அறிவியல் ஆராய்ச்சி மற்றும் கல்விமையத்தின் ஆய்வு உதவியாளரான ஜீடு கிரோசர் மற்றும் CREC விஞ்ஞானியான மஞ்சுல்தத் ஆகியோர் இணைந்து அரபிடோப்சிஸ் தாவரத்திலிருந்து மரபணுவினை எடுத்து அதனை புதிய தாவங்களுக்கு பயன்படுத்தி பார்த்ததில், அந்த தாவரம் எந்த வித நோய்க்கும் உட்படவில்லை என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதற்கு காரணம் தாவரத்தின் அதிகப்படியான பச்சையமே ஆகும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். அரபிடோப்சிஸ் தாவரத்தின் மரபணுவினை மற்ற தாவரத்திற்கு பயன்படுத்தியபோது அந்த தாவரத்தை சுமார் 36 மாதங்கள் கண்காணித்தனர். அந்த தாவரம் எந்த வித பாக்டீரியா நோய்க்கும் உட்படவில்லை என்பது தெரிய வந்தது. இந்த மரபணுவினை சிட்ரஸ் பயிர் வளர்ப்பிலும் பயன்படுத்துவதால் அந்த பயிரின் வளர்ச்சி அதிகமாகியது. சிட்ரஸ் பயிரிடு மரபணு பொறியியல் மிகுந்த முன்னேற்றத்தை கொடுக்கும். சிட்ரஸ் பாதித்த மரங்கள் முதலாவதாக இலை சாற்றை உறிஞ்சும், பிறகு சிட்ரஸ் பாக்டிரிய மரத்தின் பட்டைகளில் நுழைந்து கீழே உள்ள வேர்களை அழித்துவிடும்.

இதனால் மரம் நாளடைவில் இறந்துவிடும். தற்போது வட அமெரிக்காவில் சிட்ரஸ் நோய் பாதித்த மரங்கள் மில்லியன் உள்ளது. இதனால் மரங்களில் இருந்து வரும் பழங்களின் வருவாய் $3.6 பில்லியன் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனை தடுக்க ஒரே வழி அரபிடோப்சிஸ் மரபணுவினை மரங்களுக்கு பயன்படுத்துவதேயாகும். இதனால் 45% பாக்டீரியாவால் பாதிக்கப்பட்ட மரம் நோயிலிருந்து விடுபட்டு பழைய நிலைக்கு திரும்பி வருகிறது என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

தற்போது புளொரிடா மாகாணத்தில் உள்ள மரங்களில் இந்த மரபணுவினை விஞ்ஞானிகள் செலுத்தி வருகின்றனர். இதனால் மரங்கள் நோயிலிருந்து விடுபட்டு இன்னும் பல ஆண்டுகள் வணிக பயன்பட்டிற்கும் உதவும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இந்த மரபணு மரங்களுக்கு அதிகப்படியான பச்சையத்தை விரைவாக கொடுக்கும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

http://www.sciencedaily.com/releases/2015/11/151123202216.htm

மேலும் செய்திகளுக்கு

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.UlagaTamilOli

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Murali Selvaraj

Murali Selvaraj