Skip to content

ஓட்டுமீன், பூச்சிகளின் புற உடற்கூட்டிலிருந்து உயிரிஉரம் தயாரித்தல்      

அறுவடை செய்யப்படும் போது ஏற்படும் தரமற்ற மண் வளத்தை திரும்ப சுத்தமான கரிம மண்ணாக  பெற the Centre for Plant Biotechnology and Genomics (UPM-INIA) உள்ள ஆராய்ச்சியாளர்கள் ஒரு ஆராய்ச்சியை மேற்கொண்டனர்.

கரிம உரங்கள் போன்ற இயற்கையாக  மக்கும் தன்மையுள்ள பயோபாலிமர்களை பயன்படுத்தும் போது, கரிமமற்ற   நைட்ரஜன் உரங்கள் சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்க கூடும். ஓட்டுமீன்கள் மற்றும் பூச்சிகள் புற உடற்கூட்டின் கைட்டிலிருந்து தயாரிக்கப்படும் biocompounds பெற  Universidad Politécnica de Madrid (UPM) in collaboration with University of Hamburg-ல் உள்ள ஆராய்ச்சியாளர்கள் இணைந்து  ஒரு முறையை உருவாக்கியுள்ளனர். இது பயிர் செய்வதற்கும், மண் வளமாக இருப்பதற்கும் மிகவும் ஏற்றதாக இருக்கும்  என்று நிரூபித்துள்ளார்கள்.

இந்த கலவை, மக்கும் தன்மை கொண்டது. அதுமட்டுமல்லாது இந்த கலவை கரையாதது மற்றும் மனித சுகாதாரத்திற்கு பாதிப்பில்லாதது. இது சுற்றுச்சூழலை மாசுப்படுத்தாது. இது மற்ற கலவைகளை  விட குறைந்த அளவே பயன்படுத்தி கொள்ளலாம். பின்னர் இது ஆவியாதல் அல்லது ஊடுருவலின் மூலம் மறைவது  இல்லை.

இந்த கலவை overharvesting- ஆல்  பாதிக்கப்பட்ட மண்ணுக்கு பல்லுயிர் தந்து மீட்கும். இந்த உரத்தின் விலை மற்ற கரிம உரத்தை விட 10% விலை குறைவாகவே இருக்கும். இந்த உரம் எதிர்கால தேவைக்கு மிகவும் நன்மை அளிக்கும் விதமாக இருக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.

பாரம்பரியமாக விவசாயத்தில் பயன்படுத்தப்படும் நைட்ரஜன் உரங்கள் நீர் மற்றும் வளிமண்டலத்தை  மாசுபடுத்துகிறது. இதன்  விளைவுகளால்  மண் சிதைவு மற்றும் உலக வெப்பமயமாதல் போன்றவற்றல் தாக்கம் இருக்கும்.

3 (1)

இந்த பிரச்சினையை தீர்க்கும் பொருட்டு, the Centre for Plant Biotechnology and Genomics (UPM-INIA) மற்றும்  the University of Hamburg பல்கலைக்கழகத்தில் உள்ள  ஆராய்ச்சியாளர்கள்  டாக்டர் மார்த்தா Berrocal  மற்றும் ஜெர்மன் ஆராய்ச்சியாளர்கள் இணைந்து ஓட்டுமீன்கள் மற்றும் பூச்சிகள் புற உடற்கூடுன் கைட்டின்(chitin) – ல்  இருந்து தயாரிக்கப்படும் ஒரு மக்கும் தன்மையுள்ள பொருட்களை உற்பத்தி செய்வதற்காக ஒரு புதிய தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளனர்.

இந்த உரத்தை, காடுகள்  மற்றும் மருந்திற்கு பயன்படும்  செடி போன்றவற்றுக்கு  உரமாக  தந்து சோதனை செய்யப்பட்டது. அதுமட்டுமல்லாது இந்த உரம்  பல தாவர இனங்களின் வளர்ச்சியை தூண்டுகிறது என்று  நிரூபிக்கப்பட்டுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.

http://www.sciencedaily.com/releases/2015/10/151007084350.htm

மேலும் செய்திகளுக்கு

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.UlagaTamilOli

2 thoughts on “ஓட்டுமீன், பூச்சிகளின் புற உடற்கூட்டிலிருந்து உயிரிஉரம் தயாரித்தல்      ”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Murali Selvaraj

Murali Selvaraj