Skip to content

தக்காளி பயிரைத் தாக்கும் நோய்கள்

பயிர் பாதுகாப்பு : தக்காளி பயிரைத் தாக்கும் நோய்கள்

  • நாற்றழுகல்
  • முன்பருவ இலைக்கருகல்
  • ஃபுசேரியம் வாடல்
  • செப்டோரியா இலைப்புள்ளி
  • பாக்டீரியா வாடல்
  • பாக்டீரியா இலைப்புள்ளி
  • தக்காளி தேமல் நோய்(TMV)
  • இலை சுருட்டை நோய்(TLCV)
  • தக்காளி புள்ளி வாடல் (TSWV)

1. நாற்றழுகல்: 

அறிகுறிகள் :

  • நாற்றழுகல் தக்காளியில் இரண்டு நிலைகளில் ஏற்படுகிறது. அதாவது முளைக்குமுன் மற்றும் முளைத்தபின் ஏற்படுகிறது.
  • முளைக்கும் முன் நிலையில் மண் மேற்பரப்பை அடைவதற்கு முன்பே நாற்று இறந்துவிடுகிறது.
  • முளைக் குருத்து முற்றிலுமாக அழுகிவிடும்.
  • முளைத்த பின் நிலையில் இளம் திசுக்கள் நில மட்டத்திலேயே நோய்த் தொற்று ஏற்படுகிறது.
  • பாதிக்கப்பட்ட திசுக்கள் மென்மையாகவும், நீர்த் தோய்ந்தும் காணப்படும். நாற்று தலை கீழே வீழ்ந்து அல்லது உடைந்து விழுந்துவிடும்.

மேலாண்மை :

  • உயர்த்தப்பட்ட நாற்றங்கால் மேடைகளை உருவாக்க வேண்டும்.
  • தொடர்ச்சியான நீர்ப்பாசனம் மற்றும் சரியான வடிகால் வசதி அமைக்க வேண்டும்.
  • காப்பர் ஆக்ஸிகுளோரைடு 0.2% அல்லது போர்டிக்ஸ் கலவை கொண்டு நனைக்க வேண்டும்.
  • டிரைக்கோடெர்மா விரிடி (4கி / கிலோ விதை) அல்லது தைரம் (3கி / கிலோ விதை) விதை சிகிச்சை அளிப்பது ஒன்றே முளைக்குமுன் ஏற்படும் நாற்றழுகல் நோயைக் கட்டுப்படுத்தும்.
  • மேகமூட்டமான வானிலை இருக்கும்பொழுது 0.2% மெட்டாலிக்ஸில் தெளிக்கவும்.

2. முன்பருவ இலைக்கருகல் :

அறிகுறிகள்:

  • இது தக்காளியின் எந்த வளர்ச்சி நிலையிலும் பொதுவாக இலைகளின் மீது ஏற்படும் நோய் ஆகும்.
  • பூஞ்சை இலைகளை தாக்கும்பொழுது இலையில் புள்ளிகள் ஏற்பட்டு கருகத் தொடங்கும். முன்பருவ இலைக்கருகல் அதிகமாக வயது முதிர்ந்த இலைகளில் சிறியதாக கருப்பு காயங்களாக காணப்படும்.
  • புள்ளிகள் பெரிதாகி மற்றும் பொதுவான வளையங்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளில் காணப்படும்.
  • திசுக்களை சுற்றியுள்ள புள்ளிகள் மஞ்சள் நிறமாகின்றன. அதில் வெப்பநிலை அல்லது ஈரப்பதம் ஏற்படும்பொழுது அதிக அளவில் இலைகள் இறந்துவிடுகின்றன.
  • இலையைப் போன்றே தண்டுகளிலும் காயங்கள் ஏற்படுகின்றன.
  • பின்பருவ அழுகல் நோயினால் தாவரம் பிடுங்கி நடும்பொழுது பூஞ்சையால் பாதிக்கப்பட்ட சில சமயங்களில் இறந்துவிடுகிறது. இந்த பூஞ்சை புள்ளிவட்டம் அல்லது தண்டு வழியாக பழங்களை பாதிக்கிறது.
  • காயங்கள் பொதுவாக பழம் முழுவதிலும் காணப்படுகின்றன. பொதுவான வளையங்கள் பழங்களில் காணப்படும்.


மேலாண்மை :

  • பயிர் குப்பைகளை அகற்றுதல் மற்றும் அழித்தல்
  • பயிர் சுழற்சி முறைகளை பின்பற்றுவதன் மூலம் நோய் தாக்கத்தை குறைக்கலாம்.
  • திறம்பட நோயைக் கட்டுப்படுத்த மேன்கோசெப் 0.2% தெளிக்க வேண்டும்.

3. ஃபுசேரியம் வாடல் :

அறிகுறிகள் :

  • நோயின் முதல் அறிகுறியாக கிளை நரம்புகள் தெளிவாகி இலைகளில் பசுமை சோகை ஏற்படுகிறது.
  • இளம் இலைகள் கருகி சில நாட்களில் இறந்துவிடும். இலைக்காம்பு மற்றும் எல்லா இலைகளும் வாட ஆரம்பிக்கும்.
  • இளம் இலைகளின் கிளை நரம்புகள் வெளியெ தெரிந்து இலைக்காம்பு உதிர ஆரம்பிக்கும். விளை நிலங்களில் கீழ் இலைகள் முதலில் மஞ்சள் நிறமாக மாறும் மற்றும் சிற்றிலைகள் கருகி இறந்துவிடும்.
  • அறிகுறியின் தொடர்ச்சியாக மற்ற இலைகளுக்கும் பரவ ஆரம்பிக்கும். கடைசி நிலையில் வாஸ்குலர் அமைப்பு பழுப்பு நிறமாக மாறுகிறது. தாவர வளர்ச்சி குன்றி பின்பு இறந்துவிடும்.


மேலாண்மை :

  • பாதிக்கப்பட்ட செடிகளை அகற்றி அழித்துவிட வேண்டும்.
  • கார்பென்டிசம் (0.1%) கொண்டு பாதிக்கப்பட்ட பகுதிகளை மூழ்கச் செய்ய வேண்டும்.
  • பயிர் சுழற்சி முறையில் சாராத் தாவரங்களை அதாவது தானியங்களைப் பயிரிட வேண்டும்.

4. செப்டோரியா இலைப்புள்ளி :

அறிகுறிகள் :

  • தாவரம் அதன் எந்த வளர்ச்சி நிலையிலும் பாதிக்கப்படலாம். நோய் சிறிய சாம்பல் நிற, வட்ட இலைப் புள்ளிகளுக்கு மேல் இருண்ட எல்லைகளைக் கொண்டிருக்கும்.


மேலாண்மை :

  • பாதிக்கப்பட்ட தாவர பகுதிகளை நீக்கி அழித்துவிட வேண்டும்.
  • தைராம் அல்லது டிதேன் M-45 (2கி / கிலோ விதை) கொண்டு விதை சிகிச்சை அளிப்பதன் மூலம் விதை மூலம் பரவும் நோய் தொற்றைக் குறைக்கலாம்.
  • மேன்கோசெப் 0.2% விளை நிலங்களில் தெளிப்பதன் மூலம் திறம்பட நோயைக் கட்டுப்படுத்தலாம்.

5. பாக்டீரியா வாடல் :

அறிகுறிகள் :

  • தக்காளிப் பயிரில் ஏற்படும் கடுமையான நோய்களில் ஒன்றாகும். ஒப்பீடுகையில் அதிக மண் ஈரம் மற்றும் மண் வெப்பநிலை இந்நோய்க்கு ஏதுவாக உள்ளது.
  • பாக்டீரியா வாடல் அறிகுறியின் தன்மை வளரும் தாவரங்களை விரைவாக மற்றும் முழுமையாக வாடச் செய்வதாகும்.
  • கீழ் இலைகள் வாடுவதற்க முன்பே விழுந்துவிடும்.
  • நோய்க் கிருமி தண்டு நாளங்களில் படையெடுத்து திசுக்களை மஞ்சள் பழுப்பு நிறமாக நிறமாற்றமடையச் செய்கின்றன.
  • பாதிக்கப்பட்ட தாவர பகுதியை வெட்டி சுத்தமான நீரில் மூழ்கச் செய்யும்பொழுது பாக்டீரியா வெள்ளைக் கீற்றை போல் வெளியே வரும்.
  • இவை காயங்கள் மண் மற்றும் இதர சாதனங்களால் பரவுகின்றன.
  • நாற்று நடும்பொழுது நாற்றிற்கு சேதம் ஏற்படாமல் நட வேண்டும்.
  • வெளுக்கும் தூளை 10 கிலோ / ஹெக்டருக்கு கொடுக்க வேண்டும்.


மேலாண்மை :

பயிர் சுழற்சியாக தட்டைப்பயறு – மக்காச்சோளம் – முட்டைக்கோஸ், வெண்டை – தட்டைப்பயறு – மக்காச்சோளம், மக்காச்சோளம் – தட்டைப்பயறு மற்றும் கேழ்வரகு – கத்தரி போன்றவற்றை பயிரிடுவதன் மூலம் தக்காளியில் பாக்டீரியா வாடல் நோயைக் குறைக்கலாம்.

6. பாக்டீரியா இலைப்புள்ளி :

அறிகுறிகள் :

  • ஈரமான வானிலை மற்றும் தொடர் மழை நோய் வளர்ச்சிக்கு உகந்தது. அதிக மழைப் பெய்யும் இடங்களில் திடீரென்று இந்நோய் தோன்றுகிறது.
  • பாதிக்கப்பட்ட இலைகள் சிறியதாக, பழுப்பு நிறமாக, நீர் தோய்ந்து, வட்டப் புள்ளியைச் சுற்றிலும் மஞ்சள் நிற வட்டம் தோன்றுகிறது.
  • முதிர்ந்த தாவரங்களில் முதிர்ந்த இலைகளில் தொற்று ஏற்பட்டு இலைகள் உதிர்கின்றன.
  • முக்கிய அறிகுறி பச்சை பழங்களில் தோன்றும்.
  • மத்தியில் உள்ள காயங்கள் ஒழுங்கற்றதாகவும், வெளிர் பழுப்பு மற்றும் கடினமான சிரங்குடைய மேற்பரப்புடன் காணப்படும்.
  • பழுத்த பழங்கள் இந்நோயினால் பாதிக்கப்படுவதில்லை. விதையின் மேற்பரப்பில் பாக்டீரியா காணப்படும். விதையின் மற்ற பகுதிகளிலும் சில நேரம் காணப்படும்.
  • தாவர குப்பையிலிருந்து தானாக தக்காளிச் செடிகளுக்கு பரவுகின்றன.

மேலாண்மை :
நோயற்ற விதை மற்றும் தாவரங்களையே பயன்படுத்த வேண்டும். சாராத் தாவரங்களை பயிர் சுழற்சி மூலம் பயிரிட்டால் சென்ற வருட பயிர் சக்கைகளை தவிர்க்கலாம்.

  • மெர்குரிக் குளோரைடு (1:1000) கொண்டு விதை நேர்த்தி செய்வதன் மூலம் நோயைக் கட்டுப்படுத்தலாம்.
  • நோயைத் திறம்பட கட்டுப்படுத்த தாமிரம் மற்றும் உயிர்ம பூஞ்சாணக் கொல்லியை சேர்த்து 5 முதல் 10 நாட்கள் இடைவெளியில் தெளிக்க வேண்டும் அல்லது அக்ரிமிசின் – 100 (100ppm) 10 நாட்கள் இடைவெளியில் மூன்று முறை தெளிக்க வேண்டும்.

7. தக்காளி தேமல் நோய்:

அறிகுறிகள் :

  • தாவரத்தில் வெளிர், பச்சை புள்ளியமைப்புடனும் மேலும் இளம் இலைகள் வெயில் நாட்களில் வாடத் தொடங்கும். இவை நோயின் ஆரம்பத் தொற்றாகும்.
  • பாதிக்கப்பட்ட இலைகள் உருத்திரிந்து, மடிப்புடன், அளவை விட சிறயதாக இருக்கும். சில நேரங்களில் இலைகள் “பன்னம் இலை” அறிகுறியைக் காட்டும்.
  • பாதிக்கப்பட்ட தாவரம் வளர்ச்சி குன்றி வெளிர் பச்சை நிறமாகிறது.
  • வைரஸ் ஆடைகள், கைகளால் வேலை செய்யும் ஆட்கள் மற்றும் ஆரோக்கியமானவர்கள் பாதிக்கப்பட்ட செடியை கையாண்டுவிட்டு அல்லது தாவர குப்பைகளைக் கையாளும்பொழுது பரவுகிறது.


மேலாண்மை :

  • விதைப்பிற்கு நோயற்ற ஆரோக்கியமான செடிகளின் விதைகளை தேர்ந்தெடுக்க வேண்டும்.
  • விதைகளை விதைப்பதற்கு ஒரு நாள் முன்பு டிரைசோடியம் பாஸ்பேட் (90கி / ஒரு லிட்டர் தண்ணீர்) கரைசலில் ஊற வைப்பதன் மூலம் நோயைக் குறைக்கலாம்.
  • விதைகளை நன்கு அலசி நிழலில் உலர்த்த வேண்டும். பண்ணையில் பாதிக்கப்பட்ட தாவரங்களை கவனமாக அகற்றி அழித்துவிட வேண்டும். வைரஸ் நோய் தொற்று கொண்ட நாற்றுகளை நடவிற்கு பயன்படுத்த கூடாது.
  • புகையிலை, உருளைக்கிழங்கு, மிளகாய், குடைமிளகாய், கத்தரி போன்றவற்றை தவிர மற்ற பயிர்களை பயிர் சுழற்சிக்கு பயன்படுத்த வேண்டும்.

8. இலை சுருட்டை நோய்:

அறிகுறிகள் :

  • புதிதாக வளரும் தக்காளி செடியின் மஞ்சள் இலைகள் சுருண்டு தாவரத்தின் வளர்ச்சி குறைந்துவிடும்.
  • புதிய இலைகள் அளவில் குறைந்து சுருங்கி, நரம்புகள் மஞ்சள் நிறமாகிவிடும். இலைகள் மேல் நோக்கி சுருண்டு பார்ப்பதற்கு கிண்ணம் போல் இருக்கும்.
  • மலர்கள் தோன்றும் ஆனால் காய் பிடிப்பதற்குள் உதிர்ந்துவிடும்.


மேலாண்மை :

  • மஞ்சள் ஒட்டும் பொறியை வெள்ளை ஈக்களை கண்காணிக்க 12/ஹெக்டர் என்ற அளவில் வைக்க வேண்டும்.
  • விளை நிலங்களைச் சுற்றி வேலிப் பயிராக தானிய வகைகள் பயிரிட வேண்டும்.
  • களைகளை நீக்க வேண்டும்.
  • நாற்றுகளை வலை கூடாரம் அல்லது பசுமை  கூடாரத்தில் பாதுகாக்க வேண்டும்.
  • இமிடா குளோரைடு 0.05% அல்லது டைமெதோட் 0.05% ஐ நடவு முடிந்து 15, 25, 45 ஆகிய நாட்களில் தெளித்தால் நோயினைக் கட்டுப்படுத்தலாம்.

9. தக்காளி புள்ளி வாடல் நோய் :

அறிகுறிகள் :

  • இலைகள், தண்டு மற்றும் பழங்களில் கோடுகள் காணப்படும்.
  • சிறிய, கருப்பு, வட்ட புள்ளிகள் இளம் இலைகளில் தோன்றும்.
  • இலைகள் அடர் பழுப்பு நிறமாக மாறுகின்றன.
  • பழங்களில் அரை அங்குல விட்டம் அளவிற்கு பல புள்ளிகள் காணப்படும். பழுத்த பழங்களின் கழுத்துப் பகுதியில் சிவப்பு மற்றும் மஞ்சள் நிறமாகின்றன.
  • புள்ளி வாடல் வைரஸ் செடிப்பேன் மூலம் பரவுகின்றன.


மேலாண்மை :

  • பாதிக்கப்பட்ட செடிகளை நீக்கி அழித்துவிட வேண்டும்
  • பிற ஊள் வழங்கிளை நீக்குவதன் மூலம் வைரஸை குறைக்கலாம்.
  • வேலிப் பயிர்களை அதிகரிக்கலாம். தக்காளி விதைப்பதற்கு முன் விளைநிலங்களைச் சுற்றி சோளம், மக்காச்சோளம், கம்புப்பயிர் போன்றவற்றை 5-6 வரிசைகள் நடவு செய்யலாம்.
  • இமிடா குளோரைடு 0.05% அல்லது ஊடுறுவும் பூச்சிக் கொல்லிகளை தெளித்து வைரஸை கட்டுப்படுத்தலாம்.

நன்றி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வேளாண் இணைய தளம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Murali Selvaraj

Murali Selvaraj