Skip to content

எளிதான முறையில் கீரை பயிரிடலாம் வாங்க….

  • கீரை ஒரு மாத பயிராகும்.
  • கீரையை இந்த மாதத்தில் தான் பயிரிட வேண்டும் என்பதில்லை வருடம் முழுவதும் பயிரிடலாம்.
  • கீரை சாகுபடிக்கு நல்ல மண்ணும், மணலும் கலந்த அமிலத்தன்மை கொண்டதாக இருந்தால் போதும் நன்றாக வளரும்.
  • கீரையை பயிரிட அதிக வெட்பம் இருந்தால் மிக நன்றாக வளரும். சில கீரைகள் மீதமான வெப்பநிலையிலும் வளரும்.
  • கீரையைப் பயிரிட முதலில் நன்றாக உழவு எடுக்க வேண்டும்.
  • பிறகு பாத்தி போட்டு சாணி எரிவு போட்டு, கீரை விதையை விதைக்க வேண்டும்.
  • பிறகு, அதை மண்ணால் மூட வேண்டும். அப்போது மெல்லியதாக மண்ணை நிரப்ப வேண்டும்.
  • அதன் பின்னர் தண்ணீர் விட வேண்டும். விதைத்தவுடன் பாத்திகளில் தண்ணீரைப்பாய்ச்சும் போது நிதானமாக பாய்ச்ச வேண்டும். அப்போதுதான் விதைகள் ஒரு பக்கமாக அடித்துச் செல்லாமல் இருக்கும்.
  • விதைத்த மூன்றாம் நாள் உயிர்த் தண்ணீர் போல லேசாக தண்ணீர் பாய்ச்ச வேண்டும். அதன் பின்னர் வாரம் ஒரு முறை நீர் பாய்ச்சவேண்டும்.
  • கீரை விதைத்த 6-8 நாட்களில் விதைகள் முளைத்துவிடும்.
  • அதன் பிறகு, விதைத்த 21 நாட்களில் இருந்தே கீரையை அறுவடை செய்யலாம். அதனால் மருந்துகள் தெளிக்காமல் இருப்பது நல்லது.
  • அவ்வளவு தான் இப்போது கீரை வளர்ந்து பின்னர் அதை அறுவடை செய்துக் கொள்ளலாம்.

நன்றி

அனுபவம் வாய்ந்த விவசாயி

சித்ரா, கடத்தூர்

2 thoughts on “எளிதான முறையில் கீரை பயிரிடலாம் வாங்க….”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Murali Selvaraj

Murali Selvaraj