Skip to content

விவசாயம்-2020 என்ன செய்யவேண்டும் ?

இன்று தமிழகத்தில் விவசாயிகளுக்காக போராடிய ஐயா நம்மாழ்வார் அவர்களின் பிறந்தநாள். இந்த அக்ரிசக்தி விவசாயம் இன்று ஆலம்விழுது போல் பரந்துவிரிந்துவரக்காரணம் திரு.நம்மாழ்வார் ஐயா அவர்களுடனான திருவண்ணாமலை சந்திப்பே காரணம் http://agrisakthi.com, https://www.vivasayam.org அவரின் பிறந்தநாளில் இன்றைய விவசாயம் சந்திக்கும், சந்தித்த, சந்திக்க உள்ள பிரச்சினைகளைப் பார்ப்போம் கொரோனோக்கு முன்பு… 

குறைந்து வரும் விவசாய நிலங்கள்..!

இந்தியா என்றாலே விவசாய நாடு என்றுதான் பெயர் பெற்றது. ஆனால் தற்போது இந்தியாவில் விவசாயம் செய்வது குறைந்து வருகிறது என்ற கவலை ஒருபுறம் இருந்தாலும் மற்றொரு பக்கம் இந்தியாவில் விவசாயம் செய்யும் நிலங்கள் குறைந்துவருவது அதிர்ச்சியளிக்கிறது,. இதற்கு பல்வேறு காரணங்கள் ஆராய்ச்சியாளர்களால் சுட்டிக்காட்டப்பட்டாலும் உண்மையான காரணம் கிராமப்புறங்களில் மக்கள்… 

உணவு வங்கியின் தேவை!

இன்றைய காலகட்டத்தில் 194.6 மில்லியன் மக்கள் ஊட்டச்சத்து குறைந்தவர்கள் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளில் 30.7 சதவீத குழந்தைகள் எடை குறைபாடு உள்ளவர்கள். 2 வயது குழந்தைகளில் 58 சதவீத குழந்தைகள் வளர்ச்சி குன்றியவர்கள் 2014-ல், உலகளாவிய பட்டினிப் பட்டியலில் 55 வது இடத்தில் இந்தியா இருந்தது. 4-ல் ஒரு… 

விவசாயிகள் தாங்களே மரம் வளர்த்து வெட்டிக்கொள்ளலாம் : கர்நாடகம்

கார்நாடக அரசாங்கம் 128 வட்டங்களில் இலவசமாக மரங்களை நட்டு மரங்களை வெட்டிக்கொள்ளலாம் என்ற திட்டத்தினை அறிவித்துள்ளது. மரங்களை வெட்டி வேறு இடங்களுக்கு கொண்டு செல்லும்போது மட்டும் போக்குவரத்து அனுமதி படிவத்ததை பெற்றுக்கொள்ளலாம் என்றும் அறிவித்துள்ளது. ஆனால் 8 மாவட்டங்களில் மட்டும் இதற்கு விலக்கு அளித்துள்ளது. அதோடு சந்தன மரம்… 

ரூ.2,500 கோடி மதிப்பிலான பயிர்கள் இணையம் மூலம் விற்பனை : ஹரியானா

ஹரியானா மாநிலத்தில் காரிப்பருவத்தில் உற்பத்தியான நெல், பருத்தி மற்றும் எண்ணெய் வித்துக்களை இணையம் மூலமாக விற்பனை செய்துள்ளது ஹரியானா மாநில அரசாங்கம். ஹரியானா மாநில அரசாங்கம் ‘e-kharid’ என்ற பெயரில் தேசிய விவசாய விற்பனை சந்தைப்படுத்தும் நிறுவனத்துடன் இணைந்து இணையம் வழியாக விற்பனைகளை ஊக்குவிக்கிறது. இதில் நெல் மட்டும்… 

விவசாயிகள் தினம் !

விவசாயம் செய்யும், மனதால் விவசாயம் செய்துகொண்டிருக்கும் அனைவருக்கும் விவசாயிகள் தின நல்வாழ்த்துகள். மற்ற நாளாக இருந்தால் இன்னேரம் பெரிய தொலைக்காட்சி  நிறுவனங்கள் எல்லாம், இந்த நாளை முன்னிட்டு இந்த படம் திரையிடுகிறோம். கண்டு மகிழுங்கள் என்றே விளம்பரபடுத்தியிருப்பார்கள். ஆனால் இது கோவணம் உடுத்துபவர்களின் நாள் என்பதால் யாருக்கும் இது… 

வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை..!

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது: 12 மணி நேரத்தில் புயலாக மாற வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல்.

விவசாயிகளின் வருமானம் 20% உயர புதியத்திட்டம் : கர்நாடக மாநிலம் அறிவிப்பு

கர்நாடக மாநில அரசாங்கம், வறண்ட வெப்ப மண்டலத்துக்கான உலக பயிர் ஆய்வு மையத்துடன் இணைந்து தங்களுடைய விவசாயி்களின் வருமானம் தற்போது உள்ளதை விட 20% கூட்ட சுவர்னர் கிருஷி கிராம யோஜனா என்ற புதிய திட்டத்தினை அறிவித்துள்ளது. முதற்கட்டமாக 105 மாதிரி கிராமங்ககள் தேர்ந்தெடுக்கப்பட்டு இங்கே விவசாயி்களுடன் இணைந்து… 

முதல் உற்பத்தியில் 800 டன் பேரிச்சை : ராஜஸ்தான்

ராஜஸ்தான் மாநில அரசு 2015-2016ம் ஆண்டில் 800 டன் பேரிச்சையை உற்பத்தி செய்துள்ளதாக அறிவித்துள்ளது. மேலும் உற்பத்தி மேலும் அதிகரிக்கும் எனவும் தெரிவித்துள்ளது. 2007-2008ம் ஆண்டில் ராஜஸ்தான் மாநில அரசு 135 ஹெக்டேரில் அரபிய நாடுகளில் இருந்து வாங்கப்பட்ட பேரிச்சை செடிகளை கொண்டு ஆரம்பிக்கப்பட்டது. பின் 2008-2009 ம்… 

மழை நீர் சேகரிக்கலாம் வாங்க!

வடகிழக்கு பருவமழை இன்றுவரை திசை மாறி செல்வதால் தமிழகத்திற்கு இம்முறை 80% மழை கிடைக்காது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சூழ்நிலையில் டிசம்பர் மாதம் ஒரளவேனும் மழை தமிழகத்திற்கு கிடைக்க வாய்ப்புள்ளது, அந்த சூழ்நிலையில் நாம் கிடைக்கும் மழை நீரை நமக்கு உபயோகமாக பயன்படுத்திக்கொள்வது சாலச்சிறந்தது. நமக்கு கிடைக்கும்… 

error: Content is protected !!