Site icon Vivasayam | விவசாயம்

மஞ்சள் பயிரும், பூஞ்சாண நோய்களும்

விவசாயிகள் தாங்கள் சாகுபடி செய்துள்ள
மஞ்சள் பயிரில் பூஞ்சாண தொற்று
ஏற்பட்டால் கடைப்பிடிக்க வேண்டிய
வழிமுறைகள் கீழ்வருமாறு. தற்போது
நிலவிவருகின்ற குளிர்ந்த காலநிலை
பூஞ்சைகள் பெருகுவதற்கும் மற்றும்
நோய்களை தோற்றுவிக்கவும் சாதகமாக
உள்ளதால் மஞ்சள் பயிரில் இலைப்புள்ளி,
இலை கருகல் மற்றும் கிழங்கு அழுகல்
போன்ற நோய்கள் தோன்றி மகசூல்
இழப்பை ஏற்படுத்தும்.
இலை பாதிப்பின் அறிகுறிகள்:
இலையின் மேற்புறத்தில் கருமை
நிறப்புள்ளிகள் தோன்றும். முதலில் எண்ணெற்ற சிறு புள்ளிகளாக
தோன்றி நோயின் தீவிரம் அதிகமாகும் போது
கரும் புள்ளிகள் விரிந்து இலைகள் முழுவதும்
பரவி பின்பு இலைகள் கருகி விடும்.
இலைக் கருகலானது இலை ஓரங்களில்
ஆரம்பித்து இலையின் மையம் நோக்கி
நகரும்.
மிகவும் பாதிப்படைந்த இலைகள்
காய்ந்து சருகுகளாக மாறும்.
கட்டுப்பாடு:
பயிரிட்ட நிலத்தை களைகள் இன்றி
சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும்.
மே லும் ப ரவாமல் இருக்க

#விவசாயம்
மேலும் தகவல்களுக்கு…
https://www.vivasayam.org/wp-content/uploads/2022/01/56-ISSUE-AGRISAKTHI_mobile_28-1-2022.pdf விவசாயம்
பற்றிய அனைத்து தகவல்களையும் அறிந்துகொள்ள….

Vivasayam in Tamil

விவசாயம் செயலியை இன்றே தங்களின் கைப்பேசியில் பதிவிறக்கம் செய்துகொள்ள

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.vivasayamintamil

Exit mobile version