Site icon Vivasayam | விவசாயம்

கரிசலாங்கண்ணி கீரையை பயிர் செய்வோமா?

கீரையை பயிர் செய்வது என்பது மிக எளிது. நம் வீட்டிலயே நாம் சிறிய தோட்டம் அமைப்பதன் மூலம் சிறப்பா நமக்கத் தேவையான கீரையை நாமே உற்பத்தி செய்யலாம்.

ஞாபக மறதியை சரியாக்கும் கரிசலாங்கண்ணிக்கீரை அற்புதமான மருத்தவ குணம் கொண்ட மிகவும் சத்துள்ள கீரை இது. கரிசலாங்கண்ணி இதில் இரு வகைகள் உண்டு மஞ்சள் கரிசலாங்கண்ணி , கரிசாலங்கண்ணியைத்தான் சமைத்துச் சாப்பிடலாம் இது தான் சமையலுக்கு எற்றது.

மஞ்சள்காமாலை போக
கரிசலாங்கண்ணிக்கீரையை அரைத்து சாரெடுத்து மோரில் அல்லது பாலில் கலந்த முன்று வேளை கொடுத்தால் போதும் குழந்தைகளின் மஙசள் காமாலை போகும்.
பெரியவர்கள் ஒரு வாரத்திற்க்கு முன்று வேளையில் முன்று வாரத்திற்க்கு சாப்பிட்டு வந்தால் போதும் உணவு பத்தியம் அவசியம் உப்பு மிளகாய் கராம் இவைகளை முற்றிலும் தவிர்த்து விடவேண்டும்

வாய்தூநாற்றம் போக
கரிசாலாங்கண்ணி இலையை வாயில் போட்டு நன்றாக மென்று அதைக்கொண்டே பல் துலக்கி வந்தால் பல்நோய்கள் குணமாகும் வாய்துர் நாற்றம் போகும்

இருமல் விலக
இலைச்சாறு 150 மி.லி நல்லெண்ணய் 150மி.லி இந்த இரண்டையும் கலந்து கடாயில் ஊற்றி அடுப்பில் வைத்து கடாயில் ஊற்றி வடித்து 2 கிராம் அளவில் காலை மாலை இரு வேளை பருகிவர நீண்ட நாட்களாக தீராமல் இருக்கும் இருமல் நீங்கும்

கண்பர்வை சரியாக

கரிசலாங்கண்ணியை இடித்து 250 மி.லி சாறெடுத்து அதனோடு 250 மி.லி நல்லெணய் சாறோடு கலந்து கடாயில் ஊற்றி அடுப்பில் வைத்து காயவைத்து எண்ணெய் பதமாக மாறியதும் து இறக்கி வைக்கவேண்டும்.

சற்றுநேரம் கழித்து ஆறியதும் வடிகட்டி வைத்தக்கொள்ள வெண்டும் இதனை தினமும் தேவையான அளவ எடுத்து தலையில் தடவிவரவேண்டும் அப்படி தடவிவந்தால் உடற்சுடு தணியும் கண்பார்வை தெளிவாகும்

குடல் சுத்தமாக கரிசலாங்கண்ணிக்கீரையை வராத்திற்க்கு இரு முறை சாப்பிட்டு வந்தால் குடலில் ஏற்படும் தேவையற்ற கசடுகளை வெளியேற்றும் குடலிலுள்ள கிருமிகள் சாகும்.

மறதி சரியாக
மூன்று நாட்கள் வீதம் இரண்டு மாதங்கள் நெய் பாசிப்பருப்படன் கலந்து பொரியல் செய்து இக்கீரை சாப்பிட்டுவந்தால் புத்தி தெளிவடையும் மறதி போகும்

காதுவலிபோக
கரிசாலாங்கண்ணிக் கீரைச் சாற்றில் சில துளிகளை காதில்விடகாதுவலி தீரும்
இக்கீரையை அவ்வவப்போது சாப்பிட்டுவந்தால் அடிக்கடி ஏற்படும் மயக்கநோய் நீங்கும்
தினமும் காலையில் இக்கீரையைச் சமைத்துச் சாப்பிட்டு வந்தாலோ சாறுபிழிந்து பருகி வந்தாலோ கெட்டுப்போன ஈரல் நல்ல நிலைமைக்கு மாறும்.

சிறுநீரில் ரத்தமா
பலருக்கு சீறுநிரில் ரத்தம் வரும் சிலருக்கு மயக்கம் வரும் இப்படிப்பட்டவர்கள் கீரையிலிருந்த சாறெடுத்து தினம் இருவேளைகள் 100 மீஇலி முதல் 150 மி.லி வரை பருகிவர இந்தநோய் குணமாகும்

பற்களில் மஞசள்நிறமா
கரிசாலஙஙகண்ணியின் வேரைச் கொண்டு பல் துலக்கவும் . பல துலக்கிய பின் துலக்கிய பின் ஒரு டம்ளர் தண்ணீர் அருந்திவந்தால் நாளடையில்பற்களில் படிந்திருக்கும் மஞசள்கறை மறைந்தே பேய்விடும்.

கரிசலாங்கண்ணிக் கீரையை அடிக்கடி சாப்பிடுவவதால் தீரும் நோய்கள்
காய்ச்சல்
யானைக்காய்ச்சல்
விஷக்கடி
ஜலதோஷம்
கண்பார்வை
மஞசள்காமாலை
இரத்தசோகை
தலைப்பொடுகு
பசியின்மை
வாதம்
கல்லீரல் வீக்கம்

இப்படி பலவிதமான பயனுள்ள கீரையை நாமே உற்பத்தி செய்து நமக்கும், இந்த கீரையை பிரதான பயிராக விளைவித்து மக்களின் பயன்பாட்டுக்கும் கொண்டு செல்லலாம்.

 

Exit mobile version