Skip to content

கரும்பு சக்கையிலிருந்து எத்தனால்

உலகில் உள்ள அனைத்து நாடுகளும் படிம எரிபொருள்கள் பயன்படுத்துவதை நிறுத்திவிட்டு கரும்பு சக்கையிலிருந்து பெறப்படும் எத்தனாலை எரிபொருளாக பயன்படுத்தும் காலம் விரைவில் வரவுள்ளது.

கரும்பு சர்க்கரை உற்பத்தியில் உண்டாகும் கழிவு, அதாவது கரும்பு சாற்றை பிரித்தெடுத்த பிறகு கிடைக்கும் கரும்பு சக்கை முக்கிய lignocellulosic தாவர எச்சங்களில் ஒன்றாகும். அதன் உயர் மரக்கூழ் பாலிசாக்ரைடை கொண்டுள்ளது. இது எத்தனால் உற்பத்தியில் ஒரு முக்கிய ஆதாரமாக உள்ளது.

கரும்பு சக்கை பயன்படுத்தி உயிரிதொழில்நுட்ப ஆராய்ச்சி குழுவினர் உள்ளூர்களில் கிடைக்கும் ஈஸ்ட் மற்றும் நொதிகளை உருவாக்கும் நுண்ணுயிரிகளை பயன்படுத்தி, நொதித்தல் செயல் நடைப்பெற செய்கின்றனர். பிறகு அரைக்கும் இயந்திரத்தின் மூலம் எத்தனாலை உருவாக்கும் ஒருங்கிணைந்த செயல்பாடு நடைபெற்றது.

1 (1)

இந்த செயலினால் என்சைம் சிதைவால், காக்டெய்ல் நொதியை பயன்படுத்துகின்றனர். பெனிசிலினோசிஸ் chrysogenum BCC4504 இருந்து கச்சா என்சைம்கள் உருவாக்கப்படுகிறது. ஆய்வகத்தில் மேற்கொண்ட இறுதி சோதனையின் மூலம் உயிரி எத்தனால் உருவாக்கப்படுகிறது.

வலிமையான lignocellulosic தாவர உயிரியிலிருந்து பெறப்படும்  என்சைம்கள் மற்றும் ஈஸ்ட்களை பயன்படுத்தி எத்தனால் தயாரிக்கும் இந்த முறையானது, சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்தாத ஒரு ஒருங்கிணைந்த செயல்பாடு ஆகும்.

http://www.biotec.or.th/en/index.php/info-center/allnews/news-2010/1328-ethanol-production-from-sugarcane-bagasse

மேலும் செய்திகளுக்கு

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.UlagaTamilOli

Leave a Reply

error: Content is protected !!