Site icon Vivasayam | விவசாயம்

விவசாய சோதிடம் – புதிய தொடர்

விவசாய சோதிடம்

சோதிடங்கள் பல வகைகள் இருந்தாலும் இவ்வகை கொஞ்சம் புதியது.அன்றாட வாழ்க்கையில் இயற்கை மற்றும் கோள்களின் தன்மை, அதன் பொருட்டு கண்ணுக்குத் தெரிகின்ற கிரகங்களான சூரியன் சந்திரன் இவைகளைக்கொண்டு பருவ கால மாற்றங்களைக் கொண்டு நம் முன்னோர் விவசாயம் செய்துவந்தனர்

கோள்களின் சஞ்சாரத்திற்கேற்றவாறு நாள், திதி, நட்சத்திரம்,தமிழ் மாதங்கள் இவைகளைக்கொண்டு குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட பயிர்களை விலைவிப்பதன் மூலம் அதிக மகசூல் பெற்றும் பயிர்களுக்கு நோய் வராமல் காக்கும் வழிகளும், பூச்சிகள் தாக்காவண்ணம் இயற்கையின் போக்கில் விவசாயத்தினை செய்துவந்தனர்

இதனடிப்படையில் இயற்கையை சார்ந்து வானியல் கோள்களை அடிப்படையாக்கொண்டு விவசாயம் சார்ந்த பணிகளை செய்தால் நிச்சயம் மகசூல் அதிகமக கிட்டும் என்பதோடு சுந்தரானந்தர் எழுதிய சோதிட காவியம் என்ற நூலில் உள்ள மையப்பொருளையும், ஐந்து தலைமுறையாக சித்த மருத்துவமுறைகளை செய்துவரும் பாரம்பரிய குடும்பத்தினைச் சேர்ந்த மருத்துவர் திரு.பாலாஜி கனகசபை எம்பிபிஎஸ், அரசு மருத்துவர், கிருஷ்ணகிரி மாவட்டம் இதற்கான விளக்கத்தினை நமக்கு கொடுக்கிறார்.

இவற்றினை நீங்கள் பயன்படுத்திப்பார்த்து கருத்துக்களை எங்களுக்கு எழுதலாம். அடிப்படையில் இதை நாங்கள் ஆரம்பித்ததன் நோக்கம் பழைய வழிமுறைகளை இக்கால தொழில்நுட்பத்திற்கு ஏற்றாவறு ஒருங்கிணைக்கவேண்டும் என்பதே, இதற்காகவே இந்த தொடர் நம் அக்ரிசக்தி விவசாயத்தில் ஆரம்பிக்கப்பட உள்ளது.

Exit mobile version