Site icon Vivasayam | விவசாயம்

தயிரின் மருத்துவ குணங்கள்..!

இந்திய உணவு வகைகளில் தயிருக்கென ஒரு தனி இடம் உண்டு. இனிப்பு பதார்த்தங்களில் தொடங்கி, விருந்தை முடித்து வைப்பது வரை என அனைத்து இந்திய உணவுகளிலும் தயிர் இருக்கும். நம் முன்னோர்கள் ஏதோ காரணமில்லாமல் இப்படி தயிரை பயன்படுத்தியிருக்கிறார்கள் என நினைக்க வேண்டாம். தயிரில் இருக்கக் கூடிய மருத்துவ குணங்களை அறிந்தால் நீங்களே மலைத்துப் போவீர்கள்.

ஒரு குவளை தயிரில் 100-150 கலோரிகள், 3.5 சதவீதம் கொழுப்பு, 20 சதவீதம் சர்க்கரை, 8 முதல் 10 சதவீதம் புரோட்டீன் ஆகியவை இருக்கும். இதே ஒரு குவளை தயிரை நீங்கள் உண்ணும் போது, தினசரி உங்கள் உடலுக்கு தேவையான 20 சதவீத விட்டமின் டி ஊட்டச்சத்தும், 20 சதவீத கால்சியமும் கிடைக்கிறது.

தயிரில் உள்ள ஊட்டச்சத்துகள் செரிமானத்தை அதிகரிக்கிறது. மேலும் தயிரில் உள்ள சத்துக்களை உடல் மிக எளிதாக கிரகித்துக் கொள்ளும். தயிரை தொடர்ந்து உண்டு வந்தால் வயிற்று உபாதைகள்கள் சரியாகும் என ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

தயிரில் உள்ள நல்ல பாக்டீரியாக்கள் மனித உடலில் உள்ள நோய் எதிர்ப்புத்திறனை அதிகரிக்கிறது. தினசரி தயிரை உண்டு வந்தால் வயிற்றில் உள்ள கெட்ட பாக்டீரியாக்கள் அழிக்கப்படுகின்றன.

பாலில் இருந்து தயாரிக்கப்படும் மற்ற பொருட்களை விட தயிரில் அதிக அளவு கால்சியம் உள்ளது. எனவே தயிரை உண்பதால் எலும்புகள் மற்றும் பற்கள் வலுவடைகின்றன. மேலும் எலும்பு தேய்மானம் போன்ற நோய்கள் வருவதையும் தயிர் தடுக்கிறது.

தயிரில் உள்ள பூஞ்சை எதிர்ப்புத் திறன் தலைமுடியில் உள்ள பொடுகை அழிக்கும். எனவே தலையில் தயிரை சிறிது நேரம் தடவி, காய வைத்த பின்னர் கழுவி வந்தால் பொடுகுத் தொல்லை குறையும்.

தயிர் உங்கள் மூளையின் செயல்பாட்டை மந்தப்படுத்துவதால், கோபம், மன அழுத்தம் ஆகியவை குறைக்கப்படுகிறது. தயிர் சாப்பிட்டால் தூக்கம் வரும் என கூறுவது இதன் காரணமாகத்தான்.

தயிரை தினந்தோறும் உண்டு வந்தால் இதயத்தில் உள்ள ரத்த ஓட்ட நாளங்களில் கொழுப்பு படிவது தடுக்கப்படுகிறது. இதனால் இதய நோய்களுக்கான வாய்ப்பும் குறைகிறது.

துரதிஷ்டவசமாக சமீப காலங்களில் நாட்டு மாடுகளின் மூலம் கிடைக்கும் பாலிலிருந்து எடுக்கப்படும் தயிர் கிடைப்பதில்லை. பெரும்பாலும் பால் உற்பத்தி நிறுவனங்களின் தயாரிப்புகள் மட்டுமே நுகர்வோர்களுக்கு கிடைக்கின்றன. இது போன்ற தயிர்களில் பெரிய அளவில் மருத்துவ பயன்கள் கிடைப்பதில்லை. ஒரு வேளை உங்களுக்கு நாட்டு மாட்டின் பால் கிடைக்கும் என்றால், அதனை உறை ஊற்றி வைத்து கிடைக்கும் தயிரை மட்டும் பயன்படுத்துங்கள்.

மேலும் செய்திகளுக்கு

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.Thiral

Exit mobile version