Vivasayam | விவசாயம்

வெண்ணிற களிமண் வெள்ளைப் பூச்சிகளை கட்டுப்படுத்துகிறது

கொலம்பியாவில் உள்ள விவசாய மண்டலத்தில் பீன்ஸ் பயிர்கள் அதிக அளவு உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இந்த பீன்ஸ் பயிர்களை வெள்ளைப்பூச்சியிலிருந்து பாதுகாக்க அடிக்கடி விவசாயிகள் வேதியியல் பூச்சிக்கொல்லியை பயன்படுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் மண்வளம் மற்றும் சுற்றுச்சூழல் அதிக அளவு பாதிக்கப்படுகிறது. இதனை தவிர்க்க ஆராய்ச்சியாளர்கள் வெண்ணிற களிமண்ணை பூச்சிகளை அழிக்க பயன்படுத்தினர். இதை பயன்படுத்தியதால் பீன்ஸ் பயிரிலிருந்த நிறைய பூச்சிகள் அழிந்தன.

2

American Society for Horticultural Science-ன் ஆராய்ச்சியாளர்கள் இந்த வெண்ணிற களிமண்ணை நீரில் கலந்து தெளிப்பான் மூலம் பயிர்களுக்கு தெளித்த போது அதிலிருந்த பூச்சிகள் பெருமளவு அழிந்து விட்டது. மேலும் இதனை பற்றி Universidad Nacional de Colombia ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆராய்ச்சியிலும் பீன்ஸ் பயிரிலுள்ள பூச்சிகளை அழிப்பதற்கு வெண்ணிற களிமண்தான் அதிகம் உதவுகிறது என்பது தெளிவாக தெரிய வந்துள்ளது. இதேப்போல மூன்று சோதனைகளில் நான்கு விதமான சிகிச்சைகளை மேற்கொண்டதிலும் இந்த வெள்ளை களிமண்ணை பீன்ஸ் பயிர்களில் பயன்படுத்தியதில் செயற்கை பூச்சிகொல்லி மருந்தை பயன்படுத்தியதை விட 5% அதிக அளவு பூச்சிக்கள் அழிக்கப்பட்டது.

Foliar applications (இலை வழி பயன்பாடு) மற்றும் வெண்ணிற களிமண் பயன்பாட்டால் 80% வெள்ளை பூச்சிகளின் பாதிப்பு தடுக்கப்பட்டது. மேலும் ஆராய்ச்சியாள்ர்கள் மேற்கொண்ட மூன்று சோதனைகள் முடிவில் 90% பீன்ஸ் பயிர்களில் உள்ள பூச்சிகள் எந்தவித செயற்கை பூச்சிகொல்லி மருந்துகளும் பயன்படுத்தாமல் அழிக்கப்பட்டது நிரூபணமானது.

http://www.sciencedaily.com/releases/2016/01/160105132736.htm

மேலும் செய்திகளுக்கு

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.UlagaTamilOli

Exit mobile version