Site icon Vivasayam | விவசாயம்

பீச் மரத்தில் ஈஸ்ட்கள் அதிகம்

தற்போது படகோனியாவில் பீச் மரம் உள்ளது என்று ஆராய்ச்சியாளார்கள் கண்டறிந்துள்ளனர். விஸ்கான்சிம் மரபியல் பேராசிரியர் கிறிஸ்டோட் ஹிட்டிங்கர் பற்றும் அவருடைய குழு மேற்கொண்ட ஆய்வில் இந்த பீச் மரங்கள் சுமார் $250 பில்லியன் ஆண்டிற்கு இலாபம் தரும் என்று அவர்கள் கூறுகின்றனர். இந்த பீச் மரங்களில் அதிக ஈஸ்ட் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இந்த மரங்கள் 500 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட அட்லாண்டிக் பகுதியில் பீர்களை புளிக்க வைப்பதற்காக பயன்படுத்தி உள்ளனர். இது இயற்கை கலப்பின மது பீர் வகையை சார்ந்துள்ளது. இது ரொட்டிகள் தயாரிக்கவும் மிகவும் உதவியாக இருக்கிறது. இந்த ஈஸ்ட்கள் இயற்கை எரிப்பொருட்களை உற்பத்தி செய்வது மட்டுமல்லாமல் இன்சுலின் போன்ற மருந்துகள் தயாரிக்கவும் உதவுகிறது. அதுமட்டுமல்லாது புதிய சுவைகள் உணவு பண்டங்களில் சேர்ப்பதற்கும் பீச் மரங்கள் பயன்படுகின்றன.

தற்போது ஆராய்ச்சியாளர்கள் புதிய கலப்பின ஈஸ்ட் பிளாஸ்மிடுகளை  உயிரினத்தில் உருவாக்க முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர். இயற்கையான ஈஸ்ட் புரதத்தை அதிக அளவு வெளிப்படுத்துவதால் ஈஸ்ட் கலப்பினம் செய்வது மிகவும் எளிதான செயல் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். புதிய ஆய்வின்படி படகோனியாவின் அல்பைன் பகுதிகளில் புதிய நான்கு கலப்பின ஈஸ்ட்கள் கண்டறியப்பட்டுள்ளது.

http://www.sciencedaily.com/releases/2015/12/151204183622.htm

மேலும் செய்திகளுக்கு

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.UlagaTamilOli

Exit mobile version