Site icon Vivasayam | விவசாயம்

பயிர்களுக்கு மருந்து தெளிக்க சிறுவிமானம்

Billion – dollar drone company DJI தற்போது விவசாயிகளுக்கு பயன்படும் புதிய பயிர் தெளிப்பானை கண்டறிந்துள்ளது. இந்த புதிய தெளிப்பான் இயந்திரம் விவசாயத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

இந்த புதிய இயந்திரத்தில் புகைப்பட வசதிகள் கூட இடம்பெற்றுள்ளதாம். இந்த புதிய இயந்திர கருவியினை சீன விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இந்த கருவி பயிர்களுக்கு சிறந்த மருந்து தெளிப்பானாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இது தற்போது பயன்படுத்தப்படும் பயிர் தெளிப்பானை காட்டிலும் 40 மடங்கு அதிக பயனை தரும். இந்த இயந்திரமானது வானில் பறந்து பயிர்களுக்கு மருந்தினை தெளிக்கிறது. இது 12 நிமிடம் வானில் பறக்கும் ஆற்றல் கொண்டது.

தற்போது இது சீனா மற்றும் கொரியாவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த கருவியின் செயல்பாடு பற்றி சீனா அதன் வலைதளத்தில் கூறியுள்ளது.

உலகம் முழுவதும் விவசாயிகள் இந்த கருவியினை பயன்படுத்தி பயிர்களுக்கு மருந்து தெளிப்பான் மற்றும் கால்நடைகளை கண்காணிக்கும் கேமராவாகவும் இதனை பயன் படுத்திக்கொள்ளலாம்.

http://www.bbc.com/news/technology-34944136

மேலும் செய்திகளுக்கு

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.UlagaTamilOli

Exit mobile version