Vivasayam | விவசாயம்

2100-ம் வருடத்திற்குள்  கடல் மட்டம் உயர்வு

லீட்ஸ் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானியான ஆண்ட்ரூ ஷெப்பர்ட் என்பவர் தற்போது வெளியிட்டுள்ள அறிக்கையை பார்த்தால் நமக்கு ஆச்சரியமாக உள்ளது. பனி கண்டமான அண்டார்டிகா தற்போது அதிக அளவில் உருகி வருகிறது என்று 20 ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட IMBIF ஆராய்ச்சி மூலம் தெரியவந்துள்ளது.

2

இதனை செயற்கைகோள் படத்தினை கொண்டு விஞ்ஞானிகள் தற்போது வெளியிட்டுள்ளனர். அடுத்த நூற்றாண்டில் சுமார் 30cm அளவு கடல் மட்டம் கண்டிப்பாக உயரும் என்று அந்த தகவலறிக்கை தெரிவித்துள்ளது. தீவிர பனி இழப்பு இதற்கு காரணம் என்றாலும் நமது தொழில்நுட்ப வாழ்க்கை குறைதான் இந்த பாதிப்பிற்கு மிகப்பெரிய காரணம் என்று கூறப்படுகிறது. இதேப்போன்று கிரீன்லாந்து பகுதியிலும் இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

வரும் 2100-ம் வருடத்திற்குள் பூமியின் கடல் மட்டம் சுமார் 10cm  அளவு உயரும் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

http://www.bbc.com/news/science-environment-34859398

மேலும் செய்திகளுக்கு

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.UlagaTamilOli

Exit mobile version