Vivasayam | விவசாயம்

பால் குடிப்பதால்  எலும்புகள்   வலுவாவதில்லை

நாம் தினமும் பால் குடிப்பதால் நம்முடைய எலும்புகள்  வலுவாகவும், ஆரோக்கியமாகவும்  இருக்கும்  என்று நினைத்து  தினமும்  நாம் பால் குடிப்பதை வழக்கமாக எடுத்துக் கொள்கிறோம்.

இவ்வாறு நாம் நினைப்பது தவறு என்று  ஒரு புதிய ஆய்வை British Medical Journal ( BMJ)   வெளியிட்டுள்ளனர்.  நாம் அதிகமான பாலை உட்கொண்டால்  எலும்பு முறிவுகளிலிருந்து நம்மை  பாதுகாத்துக்கொள்ளலாம் என்று நினைப்பது தவறான  ஒன்றாகும் . மேலும் இதனால் இறப்பு விகிதமும்  அதிகமாகுகிறது  என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

2

ஸ்வீடனில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் அங்குள்ள  100,000 மக்களுக்கு தினமும் பால் குடிக்கும் வழக்கத்தை ஏற்படுத்தி  இந்த ஆராய்ச்சியை மேற்கொண்டனர்.  இந்த ஆய்வில் தொடர்ச்சியாக 11 – 20 வருடம் அதிகமான பாலை உட்கொண்ட ஆண்கள் மற்றும் பெண்களுடைய இறப்பு சதவிதம் அதிகரித்துக் கொண்டே இருந்தது. மேலும் அதிகமான பெண்கள் எலும்பு முறிவினால் இறக்கப்பட்டனர் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

 பாலில் அதிகமான அளவு sugars lactose and galactose இருப்பதால்  நாம் பாலை குடிக்கும் போது எலும்புகளுக்கு மிகவும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. மேலும் எலும்பு முறிவும் ஏற்படுகிறது.  அதனால்  குறைந்த அளவு  லாக்டோஸ்  இருக்கும் பாலை குடித்தால்  எந்த பாதிப்பும் ஏற்படாது என்று ஆராய்ச்சியாளர்கள்   ஆய்வில் கண்டறிந்துள்ளனர்.

Exit mobile version