Skip to content

கால்நடைகள்

                                       கால்நடைகளுக்கு தடுப்பூசி போடுதல்

நோக்கம்: கால்நடைகளுக்கு தடுப்பூசி போடும் பல்வேறு முறைகளை அறிதல்.

தடுப்பூசி போடும் முறைகள்: கால்நடைகளைத் தாக்கும் அநேக நச்சுயிரி நோய்கள் வந்த பின்பு கட்டுப்படுத்துவது எளிதல்ல. எனவே நோய் வந்த பின்பு கட்டுப்படுத்துவதை விட வருமுன் காத்தலே சிறந்தது. இதன் அடிப்படையில் பல்வேறு தடுப்பூசி நோய்கள் போடப்படுகிறது.

1.குடிநீரின் மூலம் வழங்குதல்

2.கண், மூக்கு துவாரங்கள் வழியே மருந்து செலுத்துதல்

3.தோலுக்கு அடியில் ஊசி மூலம் மருந்து செலுத்துதல்

4.சதையில் ஊசி மூலம் மருந்து செலுத்துதல்

5.இறக்கை சவ்வு மற்றும் இறக்கையை நீக்கி தடுப்பூசி போடுதல்

தடுப்பூசி போடும் பொழுது உயிருள்ள நுண்ணுயிர்கள் கொண்ட தடுப்பூசி மற்றும் அழிக்கப்பட்ட நுண்ணுயிரிகள் கொண்ட தடுப்பூசி ஆகியவற்றை ஒரே நாளில் வெவ்வேறு நபர்களைக் கொண்டு போட வேண்டும்.

(அருகில் உள்ள கால்நடை மருத்துவமனைக்குச் சென்று தடுப்பூசி போடும் முறைகளை நேரில் கண்டறியவும்).

                                                 கால்நடைகளுக்கு கொம்பு குருத்து நீக்குதல்

நோக்கம்: கால்நடைகளுக்கு மின்சார கொம்பு சுடும் கருவியைப் பயன்படுத்தி கொம்பு குருத்து நீக்குதல்.

கொம்பு குருத்து நீக்கும் முறை: பதினைந்து நாட்கள் முதல் 1 மாத வயதுடைய கன்றுகள் கொம்பு நீக்குவதற்கு தகுதியானதாகும். கொம்பு தோன்றும் இடத்தை அடையாளம் கண்டு அதனை சுற்றியுள்ள முடியைப் அப்புறப்படுத்த வேண்டும். நோவோகேன் 2 சத மருந்தை முடி வெட்டப்பட்ட இடத்தில் செலுத்தி உணர்ச்சியற்றதாக்க வேண்டும். பின்பு மின்சாரத்தால் சூடாக்கப்பட்ட கொம்பு சுடும் கருவியைப் கொண்டு அடிக்குருத்தை கருக்க வேண்டும். பின்னர் காயத்திற்கு ஒரு வாரகாலத்திற்கு களிம்பு இட்டு புண்ணை ஆற்ற வேண்டும்.

                            கொம்பு குருத்து நீக்குதலின் நன்மைகள்:

1.கால்நடைகள் ஒன்றுடன் ஒன்று சண்டையிடும் பொழுது காயம் ஏற்படாமல் தவிர்க்கலாம்.

2.வெவ்வேறு திசையில் கொம்புகள் வளர்வதைத் தவிர்க்கலாம்.

3.பண்ணையில் உள்ளவர்கள் எளிதாக பயமின்றி கால்நடைகளை பராமரிக்கலாம்.

(அருகில் உள்ள கால்நடை மருத்துவமனைக்குச் சென்று கொம்பு குருத்து நீக்குதலை கண்டு செய்முறை ஏட்டில் பதிவு செய்யவும்).

குடற்புழு நீக்கம் செய்தல்

நோக்கம்: கால்நடைகளில் குடற்புழுக்களால் ஏற்படும் பாதிப்புகளைத் தவிர்க்க குடற்புழு நீக்கம் செய்யும் முறையை அறிதல்.

குடற்புழு நீக்கம் செய்தல்:கால்நடைகளின் உணவுப்பாதையில் உள்ள அகஒட்டுண்ணிகளான நாடாப்புழுக்கள், தட்டைப்புழுக்கள் மற்றும் உருண்டைப்புழுக்கள் ஆகியவற்றை நீக்க 45 நாட்களுக்கு ஒரு முறை குடற்புழு நீக்கம் செய்ய வேண்டும். நாடாப்புழு தாக்குதல் இருந்தால் மட்டுமே அதற்குரிய தடுப்பு மருந்தை அளிக்க வேண்டும். குடற்புழு நீக்க மருந்துகள் மாத்திரை மற்றும் திரவ வடிவில் கிடைக்கிறது. இவற்றை வாய்வழியே நேரடியாகவோ அல்லது குடிநீரில் கலந்தோ கொடுக்கலாம். ஒரே விதமான குடற்புழு நீக்க மருந்தை தொடர்ந்து கொடுக்காமல், சுழற்சி முறையில் மாற்றிக் கொடுக்கவேண்டும்.

(அருகில் உள்ள கால்நடை மருத்துவமனைக்குச் சென்று பல்வேறு வகை குடற்புழு நீக்க மருந்துகள் மற்றும் அவற்றை பயன்படுத்தும் முறைகளையும் கண்டறிதல்)

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

editor news

editor news